பிலிப்பைன்ஸ் மக்கள் 41 நாடுகளுக்குப் வேலைக்குச் செல்வதற்கு அரசு தடை
நவ.04,2011. அரசியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்கும் ஆப்கானிஸ்தான், லிபியா, சூடான்
ஆகிய நாடுகள் உட்பட 41 நாடுகளுக்குப் பிலிப்பைன்ஸ் மக்கள் வேலைக்குச் செல்வதற்கு அந்நாட்டு
அரசு தடை விதித்துள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது. குடியேற்றதாரர்கள் அடிக்கடித்
தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் இந்தியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும் வேலைக்குச்
செல்வதற்குப் பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளது. வெளி நாடுகளில் வேலை செய்யும்
ஒரு கோடிக்கு மேற்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கையை
அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம்
பேர் வீதம் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிலிப்பைன்ஸ் குடியரசின் குடியேற்றதாரர்
சட்டத்துக்கு ஒத்திணங்கும் நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தவும் அந்நாடு தீர்மானித்துள்ளது.