நேர்காணல் – மாடத்தட்டுவிளை மக்களின் கண், உடல் தானங்கள் பாகம் 2
நவ.03,2011. அன்புள்ளங்களே, கன்னியாகுமரி மாவட்டம், மாடத்தட்டுவிளை பங்குக்குரு அருட்பணி
டோமினிக் கடாச்ச தாஸ், கண்தானம், உடல் தானம் செய்வதற்குத் தனது பங்கு மக்களை ஊக்குவித்து
வருகிறார். இப்பங்கில், கடந்த மூன்று ஆண்டுகளில் 69 பேர் கண்தானம் செய்துள்ளனர், இரண்டாயிரத்துக்கு
அதிகமானோர் கண்தானம் மற்றும் 13 பேர் உடல்தானம் செய்வதற்குப் பதிவு செய்துள்ளனர். ஒருவர்
உடல் தானம் செய்துள்ளார். அருட்பணி டோமினிக் கடாச்ச தாஸ் அவர்களின் இந்த நற்பணி மற்றும்
இந்த நற்பணி செய்த குடும்பத்தினர் வத்திக்கான் வானொலியில் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து
கொண்டதைக் கடந்த வார இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டீர்கள். அதன் தொடர்ச்சியை இன்று
நீங்கள் கேட்கலாம்.