இந்திய காரித்தாஸ் அமைப்பு பொன்விழா ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள்
நவ.03,2011. இந்தியாவில் காரித்தாஸ் அமைப்பு உருவாகி 50 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில்,
இந்தப் பொன்விழா ஆண்டில், இவ்வமைப்பு மக்களை மையப்படுத்திய பல பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக
அறிவித்துள்ளது. இந்திய காரித்தாஸ் அமைப்பு மேற்கொள்ளும் பல பணிகளில் பெண் குழந்தைகளை
கருவிலேயே அழிக்கும் முயற்சிகளுக்கு எதிரான பல திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இந்தியக்
காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை வர்கீஸ் மட்டமனா தெரிவித்தார். ஒவ்வொரு
குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெண் குழந்தைகள் மிகவும் முக்கியமானவர்கள் என்ற விழிப்புணர்வை
அனைவரும் பெறும் வகையில் கருத்தரங்குகள், மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று காரித்தாஸ்
இயக்குனர் மேலும் கூறினார். இந்திய காரித்தாஸ் அமைப்பின் இந்த முயற்சியில் பெண் மருத்துவர்களையும்
மற்றும் அரசுசாரா அமைப்பைச் சார்ந்தவர்களையும் ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
என்று காரித்தாஸ் இயக்குனர் அருள்தந்தை மட்டமனா மேலும் கூறினார்.