2011-11-02 15:40:22

இணையதளத்தில் இறந்தோர் நினைவுக்கென திருப்பலிகள் பதியும் வசதி


நவ.02,2011. இறந்தோர் நினைவுக்கென திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதற்கு, இணையதளம் வழியாகப் பதிவு செய்யும் ஒரு வசதியை பிலிப்பின்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டில் இறந்தோர் நினைவு நாள் மிகவும் பிரபலமான நாள். இந்நாளையொட்டி, நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை இறந்தொருக்கென ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலிகளை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை அந்நாட்டின் ஆயர் பேரவை ஆரம்பித்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து சென்று, பிற நாடுகளில் பணி புரியும் பலர் இந்த வசதி மூலம் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து, தங்கள் உறவுகளுக்குத் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்க முடியும் என்று இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.