ஐ.நா. வின் மரம் நடும் திட்டத்திற்கு இந்தோனேசிய திருச்சபை ஆதரவு
நவ.01,2011. இந்தோனேசியாவில் 100 கோடி மரங்களை நடுவதற்கு ஐ.நா அமைப்பு வகுத்துள்ளத் திட்டத்திற்கு
அனைத்து கத்தோலிக்கர்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்
அந்நாட்டு பேராயர் Petrus Turang. கிழக்கு Nusa Tenggara மாநிலத்தில் இந்த மரம்நடும்
திட்டம் துவக்கப்பட்ட விழாவில் உரையாற்றிய Kupang பேராயர் Turang, காடுகளைப் பாதுகாக்கும்
திட்டத்திற்கு திருச்சபை தன் ஆதரவை என்றும் வழங்குகிறது என்றார். வரும் தலைமுறையினருக்கு
பலன் தர உள்ள இத்திட்டத்தில் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல், இதில் ஆர்வத்துடன்
கத்தோலிக்கர்கள் ஈடுபடவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு பங்குதளத்திற்கும் தான் கடிதம்
அனுப்ப உள்ளதாகவும் கூறினார் பேராயர் Turang.