பெருமழையால் பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் தாய்லாந்து மக்களுக்கான திருத்தந்தையின் செபம்
அக்.31,2011. தன் மூவேளை செப உரையின் இறுதியில், தாய்லாந்து மற்றும் இத்தாலியில் மழையால்
பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் செப உறுதிகளை வழங்கினார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். இத்தாலி நாட்டின் லிகூரியா மற்றும் தொஸ்கானா பகுதிகளில் இடம்பெற்ற
மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், தாய்லாந்தின் பெருமழையால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள்
மற்றும் பெரும் சேதங்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் ஆழ்ந்த செபங்களை வழங்குவதாகத்
தெரிவித்தார் பாப்பிறை. கடந்த ஐம்பது ஆண்டுகளிலேயே மிகப்பெரிதென எண்ணப்படும் தாய்லாந்தின்
அண்மை பெருமழையால் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அண்மையில் பெய்த பெருமழையில்
குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்