உக்ரைன் நாட்டில் நீதி மிகப்பெரும் அளவில் குறைவு படுவதாக கிரேக்க கத்தோலிக்க ரீதி கவலை
அக் 29, 2011. உக்ரைன் நாட்டில் நீதி என்பது மிகப்பெரும் அளவில் குறைவுபடுவதாக தன்
ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் கிரேக்க கத்தோலிக்க ரீதி முதுபெரும் தலைவர்
Sviatoslav Shevchuk. உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமர் Yulia Tymoshenkoவிற்கு வழங்கப்பட்டுள்ள
அண்மை தீர்ப்பு குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட முதுபெரும் தலைவர், அப்பாவி மக்கள்
தொடர்ந்து தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறு
உதாரணமே என்றார். சட்டம் என்பது மனித மாண்பு, மனித விடுதலை மற்றும் மனித உரிமைகளை
பாதுகாப்பதாக இருக்க வேண்டும், அதேவேளை நீதித்துறையோ அச்சட்டம் அமுலாக்கப்படுவதை உறுதிச்
செய்ய வேண்டும் என மேலும் கூறினார் முதுபெரும் தலைவர் Shevchuk. குற்றவாளிகள் தப்பவும்
அப்பாவிகள் தண்டனை பெறவும் உக்ரைனில் நீதி அமைப்பு பயன்படுத்தப்படுவது குறித்து தன் கவலையையும்
வெளியிட்டார் அவர்.