2011-10-28 14:52:08

துருக்கியில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட பணிகள் கிறிஸ்தவ அன்புக்கு சாட்சி - பேராயர் Ruggero Franceschini


அக்.28,2011. துருக்கியில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பு அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடியாக துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டது அனைவரின் உள்ளங்களையும் கிறிஸ்தவ அன்பால் நிறைத்துள்ளது என்று துருக்கியின் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஞாயிறன்று துருக்கியைத் தாக்கிய 7.2 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் அந்நாட்டின் Van என்றும் நகர் பெரிதும் அழிந்துள்ளது என்றும், அம்மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை செய்த காரித்தாசின் பணி போற்றுதற்குரியதென்றும் Smyrna பேராயரும், துருக்கி ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் Ruggero Franceschini கூறினார்.
அசிசி நகர் பயணத்திற்கு முந்திய நாள் புதனன்று திருத்தந்தை மேற்கொண்ட செப வழிபாட்டின் இறுதியில் துருக்கி மக்களின் துயர் துடைக்க அனைவரும் முன் வர வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்று பலரும் உதவிகள் செய்து வருகின்றனர் என்றும் பேராயர் Franceschini எடுத்துரைத்தார்.
கரித்தாஸ் செய்யும் அற்புதமான துயர்துடைப்பு பணிகளால் பெரிதும் பயன் பெறுவது கிறிஸ்தவர் அல்லாதோரே என்பதை பேராயர் Franceschini சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.