அக்.28,2011. கத்தோலிக்கத் திருச்சபையும், ஆர்த்தடாக்ஸ் சபையும் எடுத்துரைக்கும் நன்னெறி
விழுமியங்கள் ஐரோப்பிய சமுதாயத்தின் கட்டமைப்பில் எவ்விதம் தாக்கங்களை உருவாக்க முடியும்
என்பதை ஆய்வு செய்யும் ஒரு கூட்டம் நவம்பர் மாதம் Minsk நகரில் நடைபெறும் என்று திருப்பீடம்
அறிவித்துள்ளது. கிறிஸ்தவ ஒருமைப்பாட்டின் வளர்ச்சி என்ற திருப்பீட அவையும், பல்சமய
உரையாடல் நிறுவனமும், Belarus நாட்டின் ஆர்த்தடாக்ஸ் அவையுடன் இணைந்து, நவம்பர் 13 முதல்
15 வரை நடத்தவிருக்கும் இந்தக் கருத்தரங்கில் சமுதாய நன்னெறி, பொருளாதார நெருக்கடி, விசுவாச
வாழ்வு சந்திக்கும் சவால்கள் ஆகிய தலைப்புக்களில் கருத்துக்கள் பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கின்போது,
நவம்பர் 14ம் தேதி நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சியில் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் பாடல்களும்,
பிற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசை படைப்புக்களும் இடம் பெறும் என்று வத்திக்கான்
செய்தி கூறுகிறது.