சுற்றுச்சூழல் அக்கறையுடன் திருப்பயணங்களை இடம்பெற ஊக்குவித்தல்
அக்.25,2011. சுற்றுச்சூழல் அக்கறையுடன் கூடிய திருப்பயணங்களை உலக அளவில் ஊக்குவிக்கும்
திட்டத்தை WWF எனப்படும் உலக வனவிலங்கு நிதி அமைப்பும் இங்கிலாந்திலுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு
அவையும் இம்மாத இறுதியில் அசிசியில் துவக்க திட்டமிட்டுள்ளன. பசுமைத் திருப்பயணங்கள்
என்ற தலைப்பில் இயங்க உள்ள இக்கூட்டமைப்பு, திருத்தலங்களின் புனிதத்துவம் காக்கப்படுவதுடன்
சுற்றுச்சூழலும் மதித்து காக்கப்படவேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தி செயல்பட
உள்ளது. உலக அமைதிக்கான அசிசி கூட்டத்தைத் தொடர்ந்து அதே நகரில் இந்து, இஸ்லாம், புத்தம்,
யூதம் மற்றும் கிறிஸ்தவத்தின் தலைவர்களுடன் சுற்றுச்சூழல் குறித்து இடம்பெற உள்ள இக்கூட்டத்தில்,
திருத்தலங்களில் திருப்பயணிகளின் வருகையால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் களைவதற்கான
வழிகள் குறித்து ஆராயப்படும்.