இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியா வெற்றி கண்டு வருகிறது
அக்.24,2011. போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியா
வெற்றி கண்டு வருவதாகவும், இருப்பினும் மிகக் கவனமுடனேயே செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
இந்திய நலத்துறை அமைச்சர். இத்திங்களன்று சிறப்பிக்கப்படும் உலக போலியோ ஒழிப்பு நாளையொட்டி
செய்தி வெளியிட்ட நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக
இந்தியாவில் எவரும் இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டதாக எந்தவித செய்தியும் இல்லை
என்றார். இளம்பிள்ளைவாத நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துக்கள் கண்டுபிடிக்காத நிலையில்,
அந்நோய்க்கான தடுப்பு மருந்துகளை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஏறத்தாழ
17 கோடியே 2 இலட்சம் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது இந்திய அரசு. போலியோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள
நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நைஜீரியா ஆகியவைகள் குறிக்கப்பட்டுள்ளன.