புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், மாரத்தான் ஓட்டம்
அக்.21,2011. புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், மாரத்தான் ஓட்டம் ஒன்று
இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்டின் ஆசீருடன் தொடங்கியது. இந்த ஓட்டத்தில்
கொண்டு செல்லப்படும் ஜோதி இப்புதன் பொது மறைபோதகத்தின் போது திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது.
திருத்தந்தை 2ம் ஜான் பால் விளையாட்டுகள் என அழைக்கப்படும் இந்த மாரத்தான் ஓட்டத்தில்
பெத்லகேமிலிருந்து எருசலேம் வரை அமைதி ஓட்டம் மற்றும் பல விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்
பெறும். அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் விழாவாகிய அக்டோபர் 22ம் தேதி நிகழ்வும்
இதில் அடங்கும். இந்த மாரத்தான் ஓட்டம் வருகிற செவ்வாயன்று நிறைவடையும்.