2011-10-20 14:26:33

கிழக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரும் மனித குல நெருக்கடி


அக் 20, 2011. கிழக்கு ஆப்ரிக்காவின் வறட்சி என்பது தற்போது மிகப்பெரும் மனித குல நெருக்கடியாக தொடர்ந்து விரிவடைந்து வருவதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் சர்வதேச வளர்ச்சிக்கான இங்கிலாந்து செயலர்.
ஒவ்வொரு நாளும் பஞ்சத்தால் நூற்றுக்கணக்கானோர், குறிப்பாக குந்தைகள் உயிரிழப்பதாக உரைத்த இங்கிலாந்து அதிகாரி ஆன்ட்ரூ மிசெல், கிழக்கு ஆப்ரிக்காவின் 24 இலட்சம் மக்களுக்கு இங்கிலாந்து உணவு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
சொமாலியாவில் மட்டும் நான்கு இலட்சம் குழந்தைகள் பசியால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் 46 இலட்சம் பேர், சொமாலியாவில் 40 இலட்சம் பேர், கென்யாவில் 35 இலட்சம் பேர் மற்றும் டிஜிபுத்தியில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.