இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் தேசிய நற்செய்தி அறிவிப்பு மையம்
அக்.20,2011. மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் உயர் மறைமாவட்டத்தில் Pachmarhi ல், Suvarta
Kendra என்ற தேசிய நற்செய்தி அறிவிப்பு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தைத்
தொடங்கி வைத்துப் பேசிய, இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்புப்
பணிக்குழுத் தலைவரான சேலம் ஆயர் எஸ்.சிங்கராயன், இந்த நற்செய்தி அறிவிப்பு மையமானது
இந்தியத் திருச்சபைக்கு ஓர் ஆசீர்வாதமாகவும் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிப்பதாகவும்
இருக்கின்றது என்று கூறினார். நம் ஆண்டவரின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பொதுநிலையினரையும்
வேதியர்களையும் துறவிகளையும் அருட்பணியாளர்களையும் ஊக்குவிப்பதற்கும் வழிநடத்துவதற்கும்
இம்மையம் உதவியாக இருக்கும் என்றும் ஆயர் சிங்கராயன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்
பேசிய போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, Suvarta Kendra இந்தியத் திருச்சபைக்கு ஒரு கொடையாக
இருப்பதோடு வடஇந்தியாவிலுள்ள திருச்சபைக்குச் சிறப்பு ஆசீர்வாதமாகவும் இருக்கின்றது என்று
கூறினார்.