2011-10-18 14:59:15

மலேரியா நோயினால் இறப்போரின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 20 விழுக்காடு குறைந்துள்ளது


அக்.18,2011. உலகில் மலேரியா நோயினால் இறப்போரின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 20 விழுக்காடு குறைந்துள்ளதென்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் 108 நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகள் மலேரியா நோய் ஒழிப்புத் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் புதிய அறிக்கையொன்று கூறுகிறது.
இதே முனைப்புடன் அரசுகள் செயல்பட்டால், 2015ம் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக, 30 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று இந்நிறுவனத்தைச் சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலகிலேயே ஆப்ரிக்க நாடுகளில் இந்த நோயினால் அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். 2009ம் ஆண்டில் மட்டும், உலகம் முழுவதிலும் மலேரியாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 781,000 என்றும், இவர்களில் ஆப்ரிக்காவின் பின்தங்கியச் சகாராப் பகுதிகளில் மட்டும் இவ்வேண்ணிக்கையில் 85 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர் என்றும் BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.