2011-10-18 14:51:00

அரசியல் கட்சிகள் இனங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்துவிட வேண்டாம் - பேராயர் Anthony Ireri Mukobo


அக்.18,2011. அண்மையில் Kenyaவின் Ngaremara பகுதியில் ஏற்பட்ட இனக் கலவரத்தில் இரு குழந்தைகள் உட்பட, ஏழுபேர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் Isiolo பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Anthony Ireri Mukobo தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்கள் சீருடையில் கொல்லப்பட்டிருப்பதைக் காணும்போது, இன வெறி நம்மை எவ்வளவு தூரம் பாதிக்கிறதென்பதை புரிந்து கொள்ளலாம் என்று கூறிய பேராயர் Mukobo, கென்ய அரசு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக, இனங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்துவிட வேண்டாமென்றும், மோதல்களில் ஈடுபட்டுள்ள இனங்களை பொதுவான ஓர் இடத்தில் கூட்டிவந்து, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது அரசின் கடமை என்றும் பேராயர் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.