அக்.17,2011. 1978ம் ஆண்டு முதல் பிலிப்பீன்சில் பணியாற்றிவந்த இத்தாலிய குரு ஒருவர்
இஞ்ஞாயிறு காலை அடையாளம் தெரியாத மனிதர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பழங்குடி
மக்களின் உரிமைகளுக்காகவும், வட Cotabato பகுதியில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படவும்
போராடி Arakan எனுமிடத்திலிருந்து பணியாற்றி வந்த 59 வயதான இத்தாலிய குரு ஃபவுஸ்தோ தெந்தோரியோவின்
கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை அறியப்படவில்லை.