2011-10-17 15:43:07

இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினருக்கான அலுவலகத்தின் செயலராக குரு வின்சென்ட் சின்னத்துரை


அக்.17,2011. இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினருக்கான அலுவலகத்தின் செயலராக தமிழக குரு வின்சென்ட் சின்னத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆயர் பேரவையின் சமூகத்தொடர்பு அவையின் செயலராகவும் சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள அருட்திரு வின்சென்ட் சின்னத்துரை, தமிழக அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் உரிமை அமைப்பின் தலவராகவும் பணியாற்றி வருகிறார்.
மேலும், இந்திய ஆயர்களின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அலுவலகத்தின் புதிய செயலராக சலேசிய சபையின் அருட்சகோதரி தெரேசா ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். உரோம் நகரின் கிரகோரியன் பலகலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அருட்சகோதரி திரேசா, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கருத்தரங்குகளையும் பயிற்சி முகாம்களையும் ஏற்பாடு செய்து உதவி வந்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.