2011-10-14 16:16:03

எகிப்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐரோப்பிய ஆயர்கள் அழைப்பு


அக்.14,2011. எகிப்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐரோப்பிய அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Péter Erdő கேட்டுக் கொண்டார்.
எகிப்தில் இராணுவம், காவல்துறை, காப்டிக்ரீதிக் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடையே அண்மையில் இடம் பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் கர்தினால் எர்டோ.
இம்மோதல்களில் ஈடுபட்ட குழுக்கள் காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது கற்களை எறிந்தார்கள் என்று இச்சம்பவத்தை நேரிடையாய்ப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
எகிப்தின் மொத்த மக்கள் தொகையில் காப்டிக் ரீதி மற்றும் பிற கிறிஸ்தவர்கள் பத்து விழுக்காடாகும்.







All the contents on this site are copyrighted ©.