2011-10-13 15:47:34

புதுடில்லியில் மனநலம் குன்றியவர்களுக்கு உதவும் 24 மணி நேர தொலைபேசித் தொடர்பு


அக்.13,2011. இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரிவுகளும், பிறரன்பு அமைப்புக்களும் இணைந்து மன நலம் குன்றியவர்களுக்கு உதவும் 24 மணி நேர தொலைபேசித் தொடர்பை, புதுடில்லியில் இப்புதனன்று ஆரம்பித்துள்ளனர்.
எம்மானுவேல் மருத்துவமனை கழகம், புனித ஸ்டீபன் மருத்துவமனை, மற்றும் மார் தோமா சபை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்த உதவியை Vandrevala அறக்கட்டளை இப்புதனன்று துவக்கி வைத்தது.
வட இந்தியாவில் மன நலம் குன்றியவர்களுக்கு உதவும் வகையில் இந்த வசதி தலைநகரில் செய்யப்பட்டுள்ளது என்று இவ்வறக்கட்டளையின் உறுப்பினரான அருண் ஜான் கூறினார்.
மன அழுத்தம், ஆழ்ந்த சோகம், பல்வேறு உறுப்புக்களின் செயல்பாடுகளை இழத்தல், மறதி ஆகிய குறைகளால் துன்புறுவோருக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த உதவியில், பல்வேறு மனநல மருத்துவர்கள் இணைந்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.