2011-10-12 16:02:42

கச்சின் பகுதி மக்களுடன் தலத்திருச்சபை ஆயர் Philip Lasap சந்திப்பு


அக்.12,2011. மியான்மாரில் நிலவி வரும் உள்நாட்டுப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள கச்சின் பகுதி மக்களை தலத்திருச்சபை ஆயர் Philip Lasap இப்புதனன்று சென்று சந்தித்தார்.
இப்போராட்டங்களால் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் கச்சின் பகுதி மக்கள் Mong Ji எனுமிடத்தில் உள்ள மரியன்னை கத்தோலிக்கக் கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களைச் சென்று சந்தித்த ஆயர் Lasap அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற நிவாரண உதவிகளைச் செய்தார்.
செப்டம்பர் 30ம் தேதி முதல் உருவான இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளையும், குடிநீர், உணவு ஆகிய உதவிகளையும் மியான்மார் வின்சென்ட் டி பால் சபையைச் சார்ந்தவர்கள் செய்து வருகின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.