அக் 11, 2011. வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என மாணவர்களிடம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே
நகரில் நடைபெற்ற மராத்தி கிரான்தாலயா நூலகத்தின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பேசிய கலாம், இன்று மாணவர்கள் நூலகத்தை முறையாக பயன்படுத்தாததால் அவர்களிடையே
வாசிக்கும் பழக்கமும், ஆழமாக மனதில் பதிய வைக்கும் திறனும் குறைந்துவிட்டது என்று கவலையை
வெளியிட்டார். கிராமப்புற நூலகங்களில் அனைத்து விதமான புத்தகங்கள் இல்லாததால், நவீன
தொழில் நுட்பமான இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் முன்னாள் குடியரசுத்
தலைவர் கலாம்.