எதிர்காலத்தைப் பற்றிய நல்ல செய்திகளைப் பகுத்தறியும் திறன் மனிதர்களின் மூளையில் உள்ளது
அக்.11,2011. பல்வேறு தடைகள், பிரச்சனைகள் மத்தியிலும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன்
நோக்கும் திறன், வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்கும் மனிதர்களிடம் இருப்பதற்கு சரியான
காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Nature Neuroscience என்ற அறிவியல் இதழில் அண்மையில்
வெளியான ஓர் ஆய்வு கட்டுரையின்படி, எதிர்காலத்தைப் பற்றிய நல்ல செய்திகளைப் பகுத்தறியும்
திறன் மனிதர்களின் மூளையில் உள்ளது என்று தெரிகிறது. நம்பிக்கைக் கண்ணோட்டம் ஒவ்வொருவரது
உடல் நலத்திலும் நல்ல விளைவுகளை உண்டாக்குகிறது என்றும் இக்கட்டுரை ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இலண்டனில்
உள்ள University Collegeஐச் சார்ந்த ஆய்வாளர்கள் மனித குலத்தில் 80 விழுக்காட்டினர் நம்பிக்கைக்
கண்ணோட்டம் உள்ளவர்கள் என்று கூறுகின்றனர்.