இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவி
அக் 11, 2011. இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 1கோடியே 47 இலட்சம்
டாலர்கள் நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளது. தனியார் துறை முதலீடுகளை அதிகரித்தல்,
உள்ளூராட்சி நிர்வாக பங்களிப்பை மேம்படுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில், யூஎஸ் எயிட்
நிறுவனத்தின் வழியாக இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது. நாட்டின் சட்டத்துறையை மேம்படுத்துவதற்கும்
அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.