2011-10-10 15:25:47

காஷ்மீர் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள விவிலியம் வெளியீடு


அக்.10,2011. இறை வார்த்தையை இன்னும் சக்திவாய்ந்த ஒரு கருவியாகப் பயன்படுத்த, இஸ்லாமியருடன் உரையாடலை வளர்க்க வேண்டும் என்று இந்தியாவில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio கூறினார்.
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் ஜம்மு-ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் 25ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அண்மையில் ஸ்ரீநகர் சென்றிருந்த பேராயர் Pennacchio, இந்த வெள்ளிவிழாவையொட்டி காஷ்மீர் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள விவிலியத்தை வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.
வெள்ளிவிழாவையொட்டி ஸ்ரீநகர் சென்றிருந்த பேராயர் Pennacchio, அம்மாநிலத்தின் அரசு அதிகாரிகளையும், மற்றும் கல்வித்துறைத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
கல்வித்துறையில் பணியாற்றி வரும் Joseph Predhuman Dhar என்ற எழுத்தாளர் கடந்த 16 ஆண்டுகளாக விவிலியத்தை காஷ்மீர் மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருதார் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
காஷ்மீர் மொழி விவிலியத்தை திருப்பீடத் தூதர் வெளியிட்ட இந்த விழாவில் ஜம்மு-ஸ்ரீநகர் ஆயர் பீட்டர் செலஸ்தீன ஏலம்பசேரியும் கலந்து கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.