2011-10-08 14:29:41

திருச்சபையில் சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி


அக்.08,2011. டிஜிட்டல் உலகில் வாழும் திருச்சபையின் உருவாக்கும் பயிற்சிகளில் சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவின் இறையியல் குருத்துவ மாணவர்களுக்கென கொல்கட்டாவில் நடைபெற்ற நான்கு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட சமூகத் தொடர்பு அவைச் செயலர் பேரருட்திரு Paul Tighe, புதிய சமூகத் தொடர்புத் துறை முன்வைக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்களுக்கு உலகளாவியத் திருச்சபையும் தலத்திருச்சபையும் பதில் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்திய ஆயர் பேரவையின் சமூகத் தொடர்பு அவை இத்தகைய கருத்தரங்கை முதன் முறையாக நடத்தியுள்ளது. இதில் இந்தியாவின் ஐந்து இறையியல் கல்லூரிகளிலிருந்து 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.