2011-10-06 14:32:07

தெசலோனிக்கா பல்கலைக் கழகத்திலிருந்து திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கம்


அக்.06,2011. கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே உரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் வளர்வதைத் தான் விரும்புவதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் இப்புதன் காலை திருத்தந்தை பொது மறைபோதகத்தை வழங்கிய பின்னர், தெசலோனிக்கா பல்கலைக் கழகத்திலிருந்து அவருக்கு திருத்தூதர் யாசோன் பெயரில் நிறுவப்பட்டுள்ள ஒரு தங்கப் பதக்கம் விருதாக வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெறுவதில் தான் மகிழ்வதாகக் கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவர்கள் அனைவரும் உண்மையிலும், ஒற்றுமையிலும் வளர்வதை இறைவன் விரும்புகிறார் என்றும், அதுவே தனது செபமும் விருப்பமும் என்றும் கூறினார்.
திருத்தூதர் பணிகள் என்ற புதிய ஏற்பாட்டு நூலில் கூறப்பட்டுள்ள யாசோன் என்பவர் கீழைரீதி மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளில் அதிக வணக்கத்தைப் பெறும் ஒரு திருத்தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.