நீதியை வலியுறுத்தும் அமைப்புக்களில் இளையோர் இணைய வேண்டும் - ஐ.நா.வின் பொதுச்செயலர்
பான் கி மூன்
அக்.05,2011. ஐ.நா.வின் பல்வேறு அமைதி முயற்சிகளிலும், இன்று உலகில் புதிதாக உருபெற்றிருக்கும்
மக்களாட்சிகளில் நீதியை வலியுறுத்தும் அமைப்புக்களிலும் இளையோர் இணைய வேண்டும் என்று
ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார். நியூயார்க் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு
ஆண்டு சொற்பொழிவொன்றை இச்செவ்வாயன்று வழங்கிய பான் கி மூன், நீதி, சமத்துவம், சட்டங்கள்
நிலைநாட்டப்படுதல் ஆகிய முயற்சிகளில் இளையோர் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்
கொண்டார். ஐவரி கோஸ்ட் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் அநீதியான, அடக்கு முறைகளை மீறி,
இளையோர் மேற்கொண்ட முயற்சிகளால் மாற்றங்கள் உருவானதைச் சுட்டிக் காட்டிய பான் கி மூன்,
நடுநிலையான சட்டதிட்டங்களுடன் கூடிய மாற்றங்கள் உருவாவதற்கு இளையோர், முக்கியமாக, படித்த
இளையோர் முன்வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.