2011-10-05 16:25:31

ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் மேற்கொள்ளும் அமைதி முயற்சி


அக்.05,2011. இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் அனைத்தும் இணைந்து நூறு நாள் அமைதிப் பராம்பரியம் என்ற முயற்சியில் ஈடுபட உள்ளன.
2012ம் ஆண்டு இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி Westminster, Southwark, Brentwood ஆகிய மறைமாவட்டங்களில் உள்ள 485 கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரைக் கொண்டு இந்த முயற்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் துவக்கமாக, அக்டோபர் 7, வருகிற வெள்ளியன்று Westminster பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியொன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி ஆரம்பமாகும் இந்த நூறுநாள் முயற்சி, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நாட்களிலும், அதைத் தொடரும் மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் போட்டிகள் நேரத்திலும் தொடர்ந்து, அக்டோபர் 28ம் தேதி நிறைவுபெறும் என்று Westminster உயர்மறைமாவட்டச் செய்தியொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.