2011-10-05 16:24:57

ஒரிஸ்ஸா தலத்திருச்சபையின் முயற்சியால் 19 இலங்கை மீனவர்கள் விடுதலை


அக்.05,2011. ஒரிஸ்ஸா தலத்திருச்சபையின் முயற்சியால் சிறையில் இருந்த 19 இலங்கை மீனவர்கள் இத்திங்களன்று விடுவிக்கப்பட்டனர்.
இந்தியப் பெருங்கடலில் அத்துமீறி மீன்பிடித்த 24 இலங்கை மீனவர்களை இரு மாதங்களுக்கு முன் இந்தியக் கடற்படையினர் கைது செய்தனர்.
ஒரிஸ்ஸாவின் கட்டக் புபனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி பணிக் குழுவின் செயலர் அருள்தந்தை திபாகர் பரிச்சாவின் முயற்சியால் இந்த 24 பேரில் 19 பேர் கடந்த சனிக்கிழமை, மற்றும் திங்கள் கிழமை ஆகிய இரு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். மற்ற ஐந்து பெரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிகிறது.
விடுவிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் தற்போது குருக்களின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்தித்த பேராயர் ஜான் பார்வா, அவர்கள் பெற்ற விடுதலை அனைவருக்கும் மகிழ்வான ஒரு நற்செய்தி என்றும், இலங்கை செல்லும் இவர்கள் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும்படியும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.