மத்திய பிரதேச தலத்திருச்சபை சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது
செப்.30,2011. இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு குறித்து
உறுதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளைத் தொகுத்து ஒரு கையேடாக வெளியிட்டுள்ளது மத்திய பிரதேச
தலத்திருச்சபை. இத்தலத்திருச்சபை வெளியிட்டுள்ள இக்கையேடு குறித்துப் பேசிய போபால்
பேராயர் லியோ கொர்னேலியோ, சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு
இதமான வழியில் எடுத்துச் சொல்வதற்கு உதவியாக இக்கையேடு இருக்கிறது என்று கூறினார். இந்தியாவில்
மிகச்சிறிய குழுவாகிய கத்தோலிக்கர் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு எடுத்து வரும் முயற்சிகளை
அரசு அதிகாரிகள் பாராட்ட வேண்டுமெனத் தாங்கள் விரும்புவதாகவும் கூறினார் பேராயர் கொர்னேலியோ. 84
பக்க இக்கையேடு, நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிறுபான்மை குழுக்களுக்கெனத்
தயாரிக்கப்பட்டது.மத்திய பிரதேச மாநிலம், 2003ம் ஆண்டிலிருந்து 100க்கு மேற்பட்ட வகுப்புவாதத்
தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது.