கென்யாவில் அரசுத்தலைவர் தேர்தல்களைத் தள்ளி வைக்கும் திட்டத்திற்கு ஆயர் எதிர்ப்பு
செப்.30,2011. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் 2012ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர்
மற்றும் நாடாளுமன்றத்திற்கானத் தேர்தல்களை டிசம்பர் வரைத் தள்ளி வைக்கும் திட்டம் மாற்றப்பட
வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தல்களைத் தள்ளி வைக்கும்
திட்டம், 2010ம் ஆண்டில் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
அமைப்பை மீறுவதாக இருக்கும் என்று கென்யாவின் Eldoret ஆயர் Cornelius Arap Korir எச்சரித்தார். கென்யாவின்
புதிய அரசியல் அமைப்பின்படி பொதுத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நடத்தப்பட
வேண்டும். ஆயினும், தேர்தல்களை டிசம்பர் 17 வரைத் தள்ளிப் போடுவதற்கு அரசியல் அமைப்பில்
மாற்றம் கொண்டு வருவதற்கு அமைச்சரவை முயற்சித்து வருகிறது என்று கூறப்படுகின்றது. கென்யாவில்
2007ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கிய கலவரத்தில் 1200க்கும் அதிகமானோர் இறந்தனர்.
6 இலட்சத்து 60 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.