திருத்தந்தை வெளியிட்ட Caritas in Veritateஎன்ற சுற்று மடலுக்கு
பொதுநிலையினர்அளித்துள்ள பதில்
செப்.29,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2009ம் ஆண்டு வெளியிட்ட Caritas in Veritate
என்ற சுற்று மடலுக்கு பொதுநிலையினர் சிலர் தங்கள் பதிலை ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின்
Los Angeles நகரில் உள்ள இலத்தீனோ தலைவர்களின் கத்தோலிக்கக் குழு என்ற அமைப்பு, திருத்தந்தையின்
இந்த சுற்றுமடலுக்கு அளித்துள்ள பதிலிருப்பு 28 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை திருப்பீடத்திற்கு அளிப்பதற்கென உரோம் நகர் வந்துள்ள Los Angeles
பேராயர் Jose Gomez, திருத்தந்தையின் சுற்று மடலுக்கு வர்த்தக உலகில் உள்ளவர்கள் அளித்துள்ள
இந்த பதில் கத்தோலிக்க விசுவாசத்தின்படி இவ்வுலகைக் காணும் ஒரு வழியைக் கூறுகிறது என்று
சொன்னார். பொது நிலையினர் மத்தியிலிருந்து வந்துள்ள இந்த முயற்சி பெரிதும் வரவேற்கத்
தக்கது என்று கூறிய அமைதி மற்றும் நீதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர்
டர்க்சன், திருத்தந்தை விடுக்கும் சுற்றுமடல்களை பொதுநிலையினர் ஆழ்ந்து படித்து பதிலிறுக்கும்
முயற்சிகளைத் தான் பெரிதும் வரவேற்பதாகக் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன், உலகம்
சந்தித்த பொருளாதார நெருக்கடி நிலைக்கு தகுந்த ஒரு பதிலாக திருத்தந்தையின் இந்தச் சுற்றுமடல்
அமைந்திருந்ததால், அதற்கு வர்த்தக உலகின் சார்பில் தகுந்த பதில்களை கூற முயன்றுள்ளோம்
என்று இந்த கழகத்தின் தலைவர் Robert Aguirre கூறினார்.