2011-09-29 15:02:18

இலங்கை காரித்தாசின் மனித உரிமைகள் கையேடு


செப்.29,2011. அன்பர்களே, “மனித உரிமைகள்-சமயக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் இலங்கையின் கொழும்புவில் இலங்கை காரித்தாஸ் நிறுவனம் பத்து நாட்கள் கருத்தரங்கை நடத்தியது. இதில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் காரித்தாஸ் அலுவலகர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், புத்தமதத் துறவிகள் என ஏறக்குறைய 70 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இலங்கை காரித்தாஸ் மனித உரிமைகள் குறித்த கையேடு ஒன்றையும் வெளியிட்டது. இவ்வியாழக்கிழமை நிறைவடைந்த இக்கருத்தரங்கு பற்றி அறிவதற்கு இலங்கை காரித்தாஸ் இயக்குனர் அருட்பணி ஜார்ஜ் சிகாமணி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.