செபமாலை அன்னை திருநாளன்றுஅமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் 140
நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் கூடுவர்
செப்.28,2011. வருகிற அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படும் செபமாலை அன்னை திருநாளன்று, 140
நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் கூடி
வந்து, மரியன்னைக்கு ஒரு தங்க ரோஜா மலரை அளிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த
ஒன்பது ஆண்டுகளாய் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் அகில உலக குழந்தைகளின் திருநற்கருணை
நேரம் என்ற இந்த முயற்சியையொட்டி அக்டோபர் 7ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்
கூடி வரும் இந்த நிகழ்ச்சியை EWTN என்ற தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. பாத்திமா அன்னையின் உலகப் பணி அமைப்பும், புனித குழந்தைப்பருவக்
கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை New Orleans பேராயர் Gregory Aymond
தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.