குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் 37 வளரும் நாடுகளில் கிடைப்பதற்கு
ஐ.நா. அமைப்பின் முயற்சிகள்
செப்.28,2011. குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் இன்னும் 37 வளரும் நாடுகளுக்கு
கிடைப்பதற்கு ஐ.நா. அமைப்பு ஆவன செய்யும் என்று இச்செவ்வாயன்று வெளியான ஓர் ஐ.நா.அறிக்கை
கூறுகிறது. குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, மற்றும் நிமோனியா
ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் தடுப்பூசிகளை 37 நாடுகளுக்கு ஐ.நா. வழங்க
உள்ளது. இந்த 37 நாடுகளில் 24 நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்தவை. ஒவ்வோர் ஆண்டும்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்து இலட்சம் பேர் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர்
என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்ரிக்கக் குழந்தைகள் என்றும் இந்த ஐ.நா.அறிக்கை
கூறுகிறது. 2000மாம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா.வின் இத்திட்டத்தால் 25 கோடி
குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்றும், 2015ம் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக 5 கோடி குழந்தைகள்
இத்திட்டங்களால் பயன்பெறுவர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Margaret
Chan கூறினார்.