ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ பிரதிநிதிகளுக்கான திருத்தந்தையின்
உரை
செப். 25, 2011. மனித வாழ்வு, தாயின் கருவில் உருவான நேரமுதல் இயற்கையான மரணம் அடையும்வரை
அது பாதுகாக்கப்படவும் மரபுரீதியான குடும்ப அமைப்புகள் ஊக்குவிக்கப்படவும் கத்தோலிக்கரும்
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் சேர்ந்து உழைக்க வேண்டும். ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும்
இடையே இடம் பெறும் திருமணத்தின் தனித்துவத்தையும், அது குறித்து தரப்படும் எந்த வகையான
தவறான விளக்கங்களிலிருந்தும் அதனைப் பாதுகாக்கக் கிறிஸ்தவர்களாகிய நாம் முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும். பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் சமூகங்களில், ஆர்த்தடாக்ஸ் சபை, இறையியல்
ரீதியாக கத்தோலிக்கத் திருச்சபையுடன் நெருக்கமாக உள்ளது. எனவே இவ்விரு சபைகளும் மீண்டும்
ஒன்றுசேர்ந்து திருப்பலியை நிகழ்த்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நம்புகிறேன்