வாழ்விற்கான முழு மரியாதையும் அன்பும் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று
செப் 22, 2011. வாழ்விற்கான முழு மரியாதையும் அன்பும் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட
வேண்டிய ஒன்று என சிலே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத்
தலைவர் பேராயர் ரிக்கார்தோ எட்சாத்தி. அண்மைக்கால இயற்கைப் பேரிடர்களின்போது சிலே
மக்கள் ஒருமைப்பாட்டுணர்வுடன் செயல் பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட பேராயர்,
முழு வாழ்விற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகத் தெரிவித்தார். நாட்டின் வருங்காலம் இளையோரின்
கையில் உள்ளதையும் நினைவூட்டிய பேராயர், இன்று நாம் எதிர்நோக்கும் சவால்கள், நம் தனித்தன்மையை
வெளிப்படுத்துவதற்கான நல் வாய்ப்புகள் எனவும் கூறினார்.