செப்.21,2011. உலகில் சுமார் 200 கோடிப் பேருக்குச் சொந்தமான வறண்டு போன நிலங்களைப் பாதுகாப்பதற்கு
உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வறுமையைக் குறைத்து வளர்ச்சிக்கானக் கூறுகளை மேம்படுத்த
முடியும் என்று ஐ.நா.உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வோர் கூறுகின்றனர். நிலங்கள்
பாலைவனமாகி வருவது அதிகரித்து வருவதால் ஆண்டு தோறும் ஒரு கோடியே 20 இலட்சம் ஹெக்டேருக்கு
அதிகமான பயிர் நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன, இந்த இழப்பின் அளவானது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும்
தென்னாப்ரிக்க நாட்டின் அளவாக இருந்து வருகிறது என்று அவர்கள் கூறினர். 2050ம் ஆண்டில்
உலக மக்கள் தொகை 900 கோடியை எட்டும் எனவும் இதனால் உலக உணவு உற்பத்தி 70 விழுக்காடு அதிகரிக்கப்பட
வேண்டுமெனவும் ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.