சீரோ-மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் பொது மாநாடு
செப்.21,2011. சீரோ-மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபை தனது வரலாற்றில் முதன்முறையாக
அதன் முதல் பொது அவையைக் கூட்டியுள்ளது. 4 இலட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட
இத்திருச்சபை, திருத்தூதர் புனித தாமஸ் கி.பி.52ல் கேரளாவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்ததுடன்
தொடர்பு கொண்டது. 1653ம் ஆண்டில் ஆயிரக்கணக்கான புனித தாமஸ் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத்
திருச்சபையை விட்டுப் பிரிந்து மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியரீதித் திருச்சபையைத் தொடங்கினர்.
பின்னர், இச்சபையைச் சேர்ந்த துறவியும் ஆயருமான Geevarghese Mar Ivanios, 1930ல் திருப்பீடத்தோடு
சமாதானம் ஆகினார். அத்துடன் சீரோ-மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபையும் உருவானது.
இச்சபையினர் திருவழிபாட்டில் அந்தியோக் மரபைப் பின்பற்றுகின்றனர்.