கத்தோலிக்கராய் வாழ்வது ஒரு சிறப்பான வாழ்வு முறை - பிரித்தானிய ஆயர் பேரவையின் அறிக்கை
செப்.19,2011. கத்தோலிக்கராய் வாழ்வது ஒரு குறிப்பிட்டக் குழுவின் உறுப்பினராய் இருக்கும்
கடமை அல்ல, மாறாக, அது ஒரு சிறப்பான வாழ்வு முறை என்று பிரித்தானிய ஆயர் பேரவையின் அறிக்கையொன்று
கூறுகிறது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய அரசுக்கு திருப்பயணம் மேற்கொண்ட
முதலாம் ஆண்டு நினைவையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்கர்களுக்கு ஆயர்கள் வெளியிட்டுள்ள ஓர்
அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணத்தின் நினைவாக
இஞ்ஞாயிறன்று Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் தலைமையில் ஆயர்களும் குருக்களும்
கொண்டாடிய கூட்டுத் திருப்பலியில், திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தியும், Canterbury
ஆங்கலிக்கன் பேராயர் Rowan Williams அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டன. பிரித்தானிய
நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் அந்தோனியோ மெனினி திருத்தந்தையின்
சார்பாக இத்திருப்பலியில் கலந்துகொண்டார்.