2011-09-17 15:40:21

பாலஸ்தீனம், ஐ.நா.வில் முழு அங்கீகாரம் பெற க்குமாறு எருசலேம் காரித்தாஸ் வாழ்த்து


செப்.17,2011. பாலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்பினர் என்ற நிலையை அங்கீகரிக்குமாறு பாலஸ்தீன நிர்வாகத் தலைவர் விண்ணப்பிக்கவிருப்பதற்கு எருசலேம் காரித்தாஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆக்ரமிப்பினால் ஏற்பட்டுள்ள கடும் விளைவுகளைக் கடந்த 44 ஆண்டுகளாகத் தாங்கள் பார்த்து வருவதாகக் கூறும் எருசலேம் காரித்தாஸ் அமைப்பின் அறிக்கை, பாலஸ்தீனம் ஐ.நா.வின் உறுப்பு நாடாக மாறினால் பாலஸ்தீனியர்கள் தங்கள் மாண்பைப் பெறுவார்கள் என்று கூறியது.
அடுத்த வாரத்தில் கூடும் ஐ.நா.பொது அவையில் இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.