2011-09-17 15:38:49

கருக்கலைப்புக்கள் வன்முறைகளை மேலும் அதிகரிக்கும் - மெக்சிகோ ஆயர்கள் எச்சரிக்கை


செப்.17,2011. கருவில் வளரும் சிசுக்கள், கருவிலே கொல்லப்படுவதை அனுமதிக்கும் ஒரு சமுதாயம் வன்முறைகளைக் கண்டு வியப்படையக் கூடாது என்று மெக்சிகோ ஆயர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருக்கலைப்பு, கருவளக்கேடு போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள ஆயர்கள், உண்மையான திருமணங்களை மதிப்பதன் மூலம் குழந்தைகள் சமுதாயத்தில் வரவேற்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வாழ்வு முடியப்போகும் தருவாயில் கருணைக்கொலை அதற்குத் தீர்வாக அமையாது என்றும், தீராத நோயாளிகளுக்கு வாழ்வின் தரத்தை வெளிப்படுத்தும் கவனம் காட்டப்பட வேண்டுமென்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் ஆண்டுதோறும் சுமார் ஐந்து இலட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.