செப்.17,2011. ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு சூரியன்களையும் அந்த இரண்டு
சூரியன்களையும் சுற்றிவரக்கூடிய கோள் ஒன்றையும் நாசாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. பூமிக்கு
சுமார் 200 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்தக் கோளுக்கு, கெப்லர் 16பி (Kepler-16b) என்று
பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கோள், அதன் இரண்டு சூரியன்களையும் சுற்றிவர 229 நாட்கள்
எடுத்துக்கொள்வதாகவும் இந்தக் கிரகத்துக்கு ஒளி வழங்கும் ஆதாரம் இரண்டுமே ஒன்றுக்கொன்று
அருகில் இருப்பதால் இந்தக் கிரகம் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் எனவும், கூறப்பட்டுள்ளது.
அதேவேளை உயிர்கள் வாழ்வதற்குரிய அம்சங்கள் இந்தக் கோளத்தில் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.