செப்.16,2011. பாகிஸ்தானில் பாப்பிறை மறைபரப்புக் கழகங்கள் தொடங்கப்பட்டதன் 60ம் ஆண்டைக்
கொண்டாடும் விதமாக அந்நாட்டுத் திருச்சபை, மறைப்பரப்பு ஆண்டை இம்மாதம் 30ம் தேதி தொடங்குகின்றது. இந்த
மறைபரப்பு ஆண்டு, 2011, அக்டோபர் ஒன்றாந்தேதியிலிருந்து 2012ம் ஆண்டு செப்டம்பர் 30 வரை
கடைப்பிடிக்கப்படும். படகை ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போங்கள் என்ற தலைப்பில் இந்த
ஆண்டு சிறப்பிக்கப்படும்.