இந்தியாவில் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் - டெல்லி பேராயர் வலியுறுத்தல்
செப்.16,2011. இந்தியத் திருச்சபை மரணதண்டனைக்கு எதிராக இருக்கின்றது என்று சொல்லி முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் மரணதண்டனையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்று
டெல்லி உயர்மறைமாவட்ட பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ கேட்டுக் கொண்டார். ராஜீவ்
காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவர்
விவகாரத்தில் இந்தியாவில் கருத்து வேறுபாடுகள் இருப்பதையொட்டி ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திற்கு
அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார் பேராயர் கொன்செஸ்சாவோ மரணதண்டனை நிறைவேற்றுவது
ஏன் நீக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் இந்திய மக்களுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும்
என்றுரைத்த டெல்லி பேராயர், மரணதண்டனை நிறைவேற்றுப்படுவதால் கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளனவா
என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.