2011-09-14 15:23:39

பாகிஸ்தானைில் பெருகியுள்ள வெள்ள நிலை பெரும் ஆபத்தை உருவாக்கியுள்ளது - காரித்தாஸ் அமைப்பு


செப்.14,2011. (இதற்கிடையே) தெற்கு பாகிஸ்தானைச் சூழ்ந்துள்ள வெள்ள நிலை பெரும் ஆபத்தை உருவாக்கியுள்ளது என்று பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு கூறியது.
பாகிஸ்தான் வெள்ளத்தால் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், மற்றும் 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு அழிவுகளை ஏற்படுத்திய வெள்ளத்திலிருந்து முழுவதும் மீண்டு வரமுடியாமல் தத்தளிக்கும் எங்களுக்கு இந்த வெள்ளம் மற்றுமொரு பெரிய அவசர நிலையை உருவாக்கியுள்ளது என்று காரித்தாஸ் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட Amjad Gulzar, FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
வெள்ளத்தால் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருக்கும் சிந்து மாநிலத்தில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் அதிகம் உள்ளனர் என்றும், அரசு வழங்கும் உதவிகள் மதச்சார்பற்ற முறையில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் பாகிஸ்தான் அமைதி மற்றும் நீதிக்குழுவின் இயக்குனரான பீட்டர் ஜேக்கப் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.