மான்செஸ்டரில் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மாதா பவனி
செப்.10,2011. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக
மாதா பவனி நடைபெறவிருக்கின்றது. “மரியா, ஒப்புரவின் தாய்” என்ற தலைப்பில் வருகிற அக்டோபர்
முதல் தேதியன்று இது நடைபெறும். “கிறிஸ்தவ வாழ்வு இயக்கம்”, “ஒப்புரவுமரியா தோழமை
இயக்கம்” ஆகிய இரண்டும் சேர்ந்து இந்தப் பவனியை நடத்துகின்றன. இந்த இயக்கங்கள் 1985ம்
ஆண்டு பெரு நாட்டு லீமா நகரில் தொடங்கப்பட்டன.