சிறுவர்களைப் பயங்கரவாதிகளின் தாக்கத்தினின்று பாதுகாக்கும் நோக்கத்தில் புதிய பள்ளிக்கூடங்கள்
செப்.10,2011. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம்
பெற்று வரும் பகுதியில் புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்துள்ளது ஒரு கிறிஸ்தவ அமைப்பு. சிறுவர்களைப்
பயங்கரவாதிகளின் தாக்கத்தினின்று பாதுகாக்கும் நோக்கத்தில் "Masihi" என்ற அமைப்பு இப்பள்ளிகளை
ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உழைத்து
வரும் இந்த Masihi அமைப்பு, அந்நாட்டு மக்கள் அனைவரின் சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காகவும்
தன்னை அர்ப்பணித்துள்ளது.