2011-09-10 15:24:38

காடுகளுக்கு அருகில் தீ வைப்பதில் கவனமாக இருக்க நாடுகளுக்கு அழைப்பு


செப்.10,2011. குப்பைகள், வேளாண்மைக் கழிவுகள் போன்ற கழிவுகளைக் காடுகள் இருக்கும் இடத்திற்கு அருகில் எரிக்காமல் இருப்பதன் மூலம் நாடுகள் 95 விழுக்காட்டு காட்டுத்தீயைக் குறைக்க முடியும் என்று ஐ.நா.ஆதரவு பெற்ற ஓர் அமைப்பு கூறியுள்ளது.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் உட்பட 14 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் செயலகங்களை உள்ளடக்கிய CPF என்ற காடுகள் பற்றிய கூட்டுப் பங்கீட்டு அமைப்பானது இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
பல நாடுகளில் காடுகள் தீயினால் பாதிப்படைவது அதிகரித்து வருவதையொட்டி இவ்வேண்டுகோளை விடுத்துள்ள இவ்வமைப்பு, பல இடங்களில் காட்டுத்தீயானது வேளாண்மை அல்லது மேய்ச்சல் நிலங்களிலிருந்து பரவுகின்றது என்று கூறியது.







All the contents on this site are copyrighted ©.